கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

10.5.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

< பாகிஸ்தானுக்கு எதிராக போராடும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி.

< அதிமுக ஆட்சியில் வீழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக திராவிட மாடல் ஆட்சி மாற்றியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

< ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு உருவாகி வரும் நிலைமை குறித்து” தொலைக்காட்சி சேனல்கள் பாக். பிரச்சினையை வகுப்புவாதம் ஆக்குகின்றன, சரிபார்க்கப்படாத கூற்றுகளைப் பரப்புகின்றன, போர் வெறியை ஊக்குவிக்கின்றன; இந்த சேனல்களை கட்டுப்படுத்துங்கள், என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, ஒன்றிய தகவல் ஒளிபரப்பு அமைச்சருக்கு கடிதம்.

< கருநாடக அமைச்சரவை இன்று பிற்படுத்தப் பட்டோருக்கு ஒதுக்கீடு விகிதத்தை  அதிகரிப்பது குறித்து விவாதிக்க உள்ளது

தி டெலிகிராப்:

< ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆபரேஷன் சிந்தூருக்காக “ஒன்றிய அரசுத் தலைமையை” பாராட்டினார், ஆனால் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி எந்தக் குறிப்பையும் தவிர்த்தார். பாஜக தலைவர் நியமனம்; மோடி-அமித்ஷாவுக்கு ‘ரப்பர் ஸ்டாம்ப்’ ஆக இருக்கக் கூடாது, ஆர்.எஸ்.எஸ். பிடிவாதம்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *