பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி பெற்ற மாநில அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட விருதுகள்

viduthalai
1 Min Read

தஞ்சை, மே 9 வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப் பான செயல்பாடுகளுக்காக இப்பாலி டெக்னிக் கல்லூ ரிக்கு நாட்டு நலப்பணித் திட்ட விருதுகள் வழங்கப்பட்டன.
நாட்டு நலப்பணித் திட்டப் பணிகளை செயல்படுத்தும் சிறந்த கல்லூரிகளை தேர்ந்தெடுத்து அவற் றிக்கு தமிழ்நாடு அரசால் மாநில அளவிலான நாட்டு நலப்பணித் திட்ட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றது.
மாநில அளவிலான சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விருது
2019-2020 ஆண்டிற்கான நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பான செயல்பாடுகளுக்காக பெரியார் நூற் றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் ப.முத்துகுமாரபதி தமிழ் நாடு அரசின் “மாநில அளவிலான சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்” (2019 – 2020) விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 07.05.2025 அன்று சென்னை கல்லூரி கல்வி இயக் குநரக வளாக அரங்கில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சென்னை கல்லூரி கல்வி ஆணையர் எ.சுந்தரவள்ளி, அய்.ஏ.எஸ். இப்பெருமைமிகு விருதினை வழங்க இக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ப.முத்து குமாரபதி பெற்றுக் கொண்டார்.
மாநில அளவிலான சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட ஆர்வலர் விருது
மேலும் இப்பாலிடெக் னிக் கல்லூரியின் இயந்திர வியல் துறை மாணவர் செல்வன் நு.பிரவீன் 2019-2020 ஆண்டிற்கான நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பான செயல்பாடுகளுக்காக தமிழ்நாடு அரசின் “மாநில அளவிலான சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட ஆர்வலர்” (2019 – 2020) விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். விருதினை 07.05.2025 அன்று சென்னை கல்லூரி கல்வி ஆணையர் எ.சுந்தரவள்ளி அய்.ஏ.எஸ். வழங்கினார். இப்பெருமை மிகு விருதினை பெற்ற பேராசிரியர் மற்றும் மாணவரை இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா, துணைமுதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *