சமதர்மம் என்பது பகுத்தறிவிலிருந்தே தோன்றுவதாகும். சமதர்மத்துக்கு எதிர்ப்பு என்பது யாரிடமிருந்து தோன்றினாலும் அது சுயநலத்திலிருந்து தோன்றுவதன்றி வேறென்ன?
பொங்கல் விழா கொண்டாடுவது என்பது தமிழர் சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் – ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கும் உரிய விழாவேயன்றி – திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு இழிவையும், கீழ்மையையும் தருகின்ற தீபாவளி, அஷ்டமி, நவமிகள் எனப்படுகின்ற ஆரியப் பண்டிகைகள் போன்றதாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’