சென்னை, மே. 9– தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரி யர் செல்வக்குமார், கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமனம் செய்யப்பட்டார். அவ ரது பதவிக்காலம் கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. இதன் பிறகு, ஓராண்டு பணிக் காலம் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த சூழலில், அவரின் நீட்டிக் கப்பட்ட பணிக் காலம் கடந்த மாதம் நிறை வடைந்தது.
முன்னதாக, இந்த பல்கலைக்கழகத்துக்கான புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய 3 பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டது. அதில், ஆளுநரின் பிரதிநிதியாக தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக கழகத்தின் துணைவேந்தரும், யு.ஜி.சி. உறுப்பினருமான சசிகலா வஞ்சாரி உள்பட 3 பேர் இடம் பெற்றிருந்தனர்.
இந்தநிலையில், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பினை தொடர்ந்து கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கான புதிய தேடுதல் குழுவை நியமித்து அரசிதழ் வெளி யிடப்பட் டுள்ளது. அதில், அரசு பிரதிநிதிகளாக உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அக்பர் அலி, அரசு பிரதிநிதியாக முன்னாள் அய்.ஏ.எஸ் அதிகாரி ஜோதி ஜெகராஜன், கல்வி அலுவல் குழு பிரதிநிதியாக சென்னை கால்நடைமருத்துவ கல்லூரியின் மேனாள் பேராசிரியர் டாக்டர் ராபின்சன் ஜே.ஜே. ஆபிரகாம் ஆகியோர் நிய மிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் தேடுதல் குழுவும் அமைத்து அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசுப் பிரதி நிதியாக உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி மோகன் ராம், கல்வி அலுவலர் குழு பிரதிநிதியாக பேராசிரியர் ராமசுந்தரம், பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழு பிரதிநிதியாக பேராசிரியர் ராமநாதன் ஆகிய 3 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர்.