தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை ‘நீட்’ தேர்வின் மூலம் அழிக்கப் பார்க்கிறார்கள்

viduthalai
1 Min Read

சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு பேச்சு

தஞ்சாவூர், மே 9– தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லுாரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சட்டப்பேரவைத் தலைவர்
மு.அப்பாவு பேசியதாவது:

நீட் தேர்வில் உண்மைத் தன்மை இல்லை. நீட் தேர் வில், மது குறித்து கேள்வி கேட்டுள்ளனர். நம் கல்விக் கொள் கையை கேள்விக்குறியாக்கி, அழிக்கும் திட்டம் தான் நீட் தேர்வு. இதனாலேயே, நீட் தேர்வை தமிழ்நாடு எதிர்க்கிறது.

ஒரு இனம் அழிவதற்கு வேறு எதுவும் செய்ய வேண்டாம். மொழியை அழித்தால் போதும். எனவேதான், மொழி கொள்கையில் தமிழ்நாடு உறுதியாக இருக்கிறது.

பெற்றோர்கள் செய்யும் தொழிலையே அவர்களுடைய பிள்ளைகளும் செய்ய வேண்டும் என சொல்வதே மனுதர்மம் என்கின்றனர். அதை எப்படி தர்மம் என ஏற்க முடியும்; சொல்லப்போனால், அது அதர்மம். இது, ஆர்.எஸ்.எஸ்.,சின் சித்தாந்தங்களில் ஒன்று.

தமிழ்நாட்டில், சட்டம்-ஒழுங் குக்கு சவால் விடும் பிரச்சினைகள் என்றால், அதன் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பலர் கைது செய்யப்படுகின்றனர். இது எதிர்கட்சியினருக்கும் தெரியும். ஆனாலும், அரசு மீது குற்றம்சாட்டுகின்றனர்.

சட்டப் பேரவையில் விருப்பு-வெறுப்பின்றி, அனைவரும் பேச நேரம் அளிக்கப்பட்டது. சொல்லப்போனால், ஆளுங் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு குறைந்த அளவிலேயே பேச வாய்ப்பளிக் கப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *