திருப்பூர், மே 9- அ.தி.மு.க.வின் பலவீனத்தை பயன்படுத்தி, நெருக்கடி கொடுத்து பா.ஜனதா கூட்டணி அமைத்துள்ளது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலா ளர் முத்தரசன் கூறினார்.
மாநிலக்குழு கூட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு, மாநிலக்குழு கூட்டம் 6.5.2025 அன்று திருப்பூரில் உள்ள தனியார் விடுதியில் தொடங் நடைபெற்றது. 7.5.2025 அன்று கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா, மாநில செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர் திருப்பூர் சுப்பராயன் எம்.பி. உள்பட தமிழ்நாடு முழுவதும் இருந்து மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற னர். தமிழ்நாடு அர சியல் நிலைமை குறித்தும், பிரச்சினைகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டம் குறித்து முத்தரசன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சருக்கு வாழ்த்து
தி.மு.க. தலைவர் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 4 ஆண்டு நிறைவு செய்து 5ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அவருக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வாழ்த்துக்கள்.
ஆதிதிராவிட மக்கள் குடியிருக்கும் பகுதியில் காலனி என்ற சொல் நீக்கப்படும் என்று அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. நீட் தேர்வால் மாணவர்க ளின் உயிரிழப்பு அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
நெருக்கடி கொடுத்து கூட்டணி
தமிழ்நாட்டில் பா.ஜன தாவுடன் கூட்டணி சேர மாட்டோம். எந்த தேர்தலிலும் பா.ஜனதா வுடன் கூட்டணி இல்லை என்று மேனாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திரும்ப, திரும்ப கூறி வந்தார். ஆனால் திடீரென கூட்டணி வைத்துள்ளார். ‘யாருடனும் கூட்டணி வைப்போம், அதை கேட்க நீ யார்’ என்று எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். ஆனால் அவர் எதற்காக கூட்டணி அமைத்துள்ளார் என்பதை விளக்க வேண்டும்.
அ.தி.மு.க.வின் பலவீனத்தை பயன்படுத்தி, நிர்பந்தம் செய்து, நெருக்கடி கொடுத்து கூட்டணியில் பா.ஜனதா சேர்த்துள்ளது. அ.தி.மு.க.வின் கொள்கை திராவிட இயக்க கொள்கை. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் வந்த கொள்கை. இதற்கும் பா.ஜனதாவுக்கும் என்ன சம்பந்தம். கொள்கையற்ற நிலை காரணமாக நெருக்கடிக்கு அஞ்சி, கூட்டணி வைத்துள்ளனர்.
காஷ்மீரில் பயங்கர வாதிகள் இந்திய மக்கள் 26 பேரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். பயங்கர வாத அழிப்புக்கான இந்திய அரசின் நட வடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்டு முழு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்