கடந்த ஆண்டைவிட ஒரு சதவீதம் அதிகம்
சென்னை, மே 9 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் செயல்படும் பள்ளிகளில் 88.12 சதவீதம் தேர்ச்சி பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில், “2024-2025 ஆம் கல்வியாண்டில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் நடை பெற்ற 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 2,328 மாணவர்கள் மற்றும் 3,059 மாணவியர் என மொத்தம் 5,387 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினார்கள். இதில் 1,949 மாணவர்கள் (83.70%) மற்றும் 2,798 (91.46%) மாணவியர் என மொத்தம் 4,747 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 88.12% ஆகும். (கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் 87.13% ஆகும்.)
பாடவாரியான தேர்ச்சி சதவிகிதத் தில் கணினி பயன்பாடுகள் பாடப் பிரிவில் 26, கணினி அறிவியல் பாடப்பிரிவில் 19, கணக்குப் பதிவியல் பாடப்பிரிவில் 3, வேதி யியல் பாடப்பிரிவில் 2, பொரு ளியல் பாடப்பிரிவில் 2, வரலாறு பாடப் பிரிவில் 1, புவியியல் பாடப்பிரிவில் 1 என மொத்தம் 54 மாணவ, மாணவியர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 65 மாணவ, மாணவியர்கள் 551க்கு மேல் 600 வரை மதிப்பெண்களும், 247 மாணவ. மாணவியர்கள் 501லிருந்து 550 வரை மதிப்பெண்களும், 541 மாணவ, மாணவியர்கள் 451லிருந்து 500 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் அய்ந்து இடங்களில் உள்ள பள்ளிகள்: புல்லா அவென்யூ சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 591 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், பெரம்பூர், எம்.எச்.சாலை-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண் களுக்கு 588 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், பெரம்பூர், எம்.எச்.சாலை-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 583 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற் றுள்ளன.
தேர்ச்சி விகிதத்தின் அடிப்படை யில் முதல் அய்ந்து இடங்களில் உள்ள பள்ளிகள்: நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதத்துடன் முதலிடத்தையும், புலியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி 98.61 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 97.36 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும், நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப்பள்ளி 97.22 சதவீதத்துடன் நான்காம் இடத்தையும், திருவான்மியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி 95.59 சதவீதத்துடன் அய்ந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது