பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள்

1 Min Read

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பள்ளிக்குச் சென்று வாழ்த்துகளை கூறுங்கள்.

அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவர் களுக்கும், ஆசிரியர்களுக்கும்  அய்யாவின் புத்தகங்களை பரிசளியுங்கள்.

100 % தேர்ச்சி பெற்ற அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களை சந்தித்தும் பாராட்டுகளை தெரிவியுங்கள்.

இது போலவே பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் போதும் செயலாற்றுங்கள்.மிகக் குறைந்த விலையில் பரிசளிக்க கூடிய புத்தகங்கள் நமது பெரியார் திடல் புத்தக விற்பனை நிலையத்தில் உள்ளது.போன் செய்து கேட்டால் விலைப்பட்டியல் வாட்ஸப்பில் அனுப்பி விடுவார்கள். நீங்கள் எந்த புத்தகம் எத்தனை வேண்டும் என்று குறிப்பிட்டால் உடன் அனுப்பி விடுவார்கள்.

பெரியார் புத்தக நிலையம் தொடர்பு எண்: 8300393816

உடன் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் விரைந்து செயலாற்றி, மேற்கொண்ட பணிகளை தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டுகிறோம்.

– இரா. தமிழ்ச்செல்வன் தலைவர்
– வி.மோகன் பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *