தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு காவல்துறை இயக்குநராக சங்கர் ஜிவால் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

2 Min Read

அரசியல்

சென்னை ஜூன் 30 தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு, காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு ஆகியோர் இன் றுடன் (30.6.2023) ஓய்வு பெறுவதையடுத்து, புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா, புதிய காவல்துறை தலைமை இயக்குநராக சங்கர் ஜிவால் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது.

 புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சிவ்தாஸ் மீனா, ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். 1964ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி பிறந்தவர். ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றுள்ளார். அதன்பின் ஜப்பானில் பன்னாட்டு ஆய்வுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றார். ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, ஜப்பானிய மொழிகளை கற்றுள்ளார். 1989ஆம் ஆண்டு அய்ஏஏஸ் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு கேடரில் அய்ஏஎஸ் அதிகாரியாக சிவ்தாஸ் மீனா பணியில் சேர்ந்தார். காஞ்சிபுரத்தில் உதவி ஆட்சியராக பயிற்சியை அவர் தொடங்கினார். தொடர்ந்து கோவில்பட்டி உதவி ஆட்சியர்,  வேலூர் கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் என படிப்படியாக பணி உயர்வு பெற்றார். ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்து துறை என பல்வேறு துறைகளில் இவர் பணியாற்றியுள்ளார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் உள்பட பல முக் கிய பதவிகளை சிவ்தாஸ் மீனா வகித் துள்ளார். புதிய தலைமை செயலாளராகி யுள்ள சிவ்தாஸ் மீனாவின் பதவிக்காலம் வரும் 2025ஆம் ஆண்டு அக்டோபர் வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு காவல்துறை இயக்குநராக   சைலேந்திரபாபு உள்ளார். இவர் இன்றுடன் (30.6.2023) ஓய்வு பெறுகிறார். இதனால் தமிழ்நாடு காவல்துறைக்கு 31ஆவது தலைமை இயக்குநரை தேர்வு செய்ய தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா மற்றும் காவல்துறை சைலேந்திரபாபு ஆகியோர் கடந்த 22ஆம் தேதி டில்லி சென்று தேர்வுக் கமிட்டி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது புதிய காவல்துறை தலைமை இயக்குநருக்கான பட்டியலை தேர்வுக் கமிட்டி முன்பு தமிழ்நாடு அரசு சார்பில் அளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து தமிழ்நாட்டிற்கு புதிய காவல்துறை தலைமை இயக்குநர் யார் என்பது குறித்து டில்லியில் உள்ள தேர்வு கமிட்டி பணி மூப்பு மற்றும் சிறப்பாக பணியாற்றிய 3 பேர் கொண்ட பட்டியலை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியது. அந்த புதிய பட்டியலின் படி தமிழ்நாடு அரசு சுதந் திரமாகவும், மிகவும் கவனமாக பரிசீலனை செய்து, தமிழ்நாடு காவல்துறைக்கு புதிய இயக்குநராக அய்பிஎஸ் அதிகாரி சங்கர் ஜிவாலை ஜூலை 1ஆம் தேதி முதல் நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான உத்த ரவை தமிழ்நாடு தலைமை செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித் துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *