மாநிலங்களவை உறுப்பினர் மு.சண்முகத்துடன் திராவிடர் கழக தொழிலாளர் அணியினர் சந்திப்பு

1 Min Read

அரசியல்

பாபநாசம், ஜூன் 30- தொழி லாளர் முன்னேற்ற சங்க பேரவை  மாநில பொதுச் செயலாளர்- மாநிலங்க ளவை உறுப்பினர்- பகுத் தறிவாளர்  மு.சண்முகம் அவர்களை 28.6.2023 காலை பாபநாசம் ஒன் றியம் பட்டவர்த்தியில் அவரது இல்லத்தில் திரா விடர் கழக தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் சந்தித்தனர்.

பெல் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு தொடர் பாக நடைபெற உள்ள பேச்சுவார்த்தை தொடர் பாக கலந்து ஆலோசிக்கப் பட்டது.

திராவிடர் கழக தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளர்  மு. சேகர், மற்றும் திராவிடர் தொழிலாளர் சங்க மாநில பேரவை செயலா ளர் குடந்தை க.குருசாமி, குடந்தை மாவட்ட தொழிலாளர் அணியின் மாவட்ட செயலாளர் உமையாள்புரம் கோவி. கண்ணன்  திருச்சி பிஎச் இஎல் தொழிற்சங்கத்தி னுடைய பொறுப்பாளர் காமராஜ் மற்றும் ஆரோக்கியம் ஆகியோர்  தொழிற்சங்கத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்து கொண்டு ஆலோசனைகள் பெற் றார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *