கீழப்பாவூர் – கழகப் பொதுக் குழு உறுப்பினர் பி.பொன்ராஜ் மறைவிற்கு இரங்கல்

1 Min Read

கீழப்பாவூரை சார்ந்த கழக பொதுக்குழு உறுப்பினர் பி.பொன்ராஜ் (வயது 65) நேற்று இரவு (6.5.2025) 10.15 மணியளவில் மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து வருந்துகிறோம்.

அவர் கடந்த 40 ஆண்டுகளாக இயக்கப் பணியாற்றியவர். கழக போராட்டங்களிலும் தவறாது கலந்து கொள்ளக்கூடியவர் சிறை யேகியவர்.  அனைத்து இயக்க நிகழ்வுகளிலும் குடும்பத்தோடு கலந்து கொள்ளக்கூடியவர். பல முறை குருதிக்கொடை செய்தவர். சிறந்த பொது நலத் தொண்டர்!.

மறைவுக்குப் பிறகு அவரது விழிகள் கொடையாக வழங்கப்பட்டன.

சிறந்த இயக்க வீரனின் மறைவிற்கு இரங் கலைத் தெரிவிப்பதுடன் குடும்பத்தின் தலைவரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தினருக்குக் கழகத்தின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை      தலைவர்,

7.5.2025        திராவிடர் கழகம்

குறிப்பு: தமிழர்தலைவர், கழகத் துணைத் தலைவர் கவிஞர்கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர்  வீ.அன்புராஜ் ஆகியோர் அவருடைய மகன் பிரவீன்குமாரிடம் ஆறுதல் தெரிவித்தார்கள்.

இறுதி நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்ட கழக காப்பாளர் சீ.டேவிட் செல்லதுரை, பொதுக்குழு உறுப்பினர்கள் அய்.இராமச்சந்திரன், வே.கோபால், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், மாவட்ட செயலாளர் தெ.சண்முகம், மாவட்ட திமுக செயலாளர் வே.செயபாலன், கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், கீழப்பாவூர் நகர திமுக செயலாளர் ஜெகன், மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர் அ.சவுந்தரபாண்டியன், தொழிலதிபர் பி.ஆர்.கே.அருண், கீழப்பாவூர் தலைவர் ராமசாமி, ந.இராமச்சந்திரன், மு.சிவப்பிரகாசம், பி.சிவா, இல.அன்பழகன், இல.அறிவழகன், புதியபழனி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் கோபால், மேலமெஞ்ஞானபுரம் மருத்துவர்கள் அன்பரசன்,  கவுதமி மற்றும் டே.சாந்தி, கி.சேகர், சே.முருகன்,  அன்ன புஷ்பம், மல்லிகா, த.மணிவண்ணன், ஜெய்சிங்,  ம.தேன்மொழி, தே.தேன்மொழி, செல்வ மாதா, ஜான்சி,  செம்மலர், ரம்யா, ஞானமணிசமுத்திரம், மாவட்ட ப.க. பொறுப்பாளர்கள் ஆறுமுகம், பாரதிராஜா ஆகியோர் பங்கேற்றார்கள்.  பின்  உடல் எவ்வித சடங்கும் இல்லாது எரியூட்டப்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *