வேலூர், மே 7– வேலூர் மாவட்ட திராவிடர் கழக முன்னோடியும், கழக பொதுக் குழு உறுப்பினருமான ச.கலைமணியின் 75ஆவது பிறந்தநாள் விழா கழக விழாவாக வேலூர், பெரியார் பெருந்தொண்டர் பழனியப்பன் அரங்கத்தில் 02.05.2025 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு எழுச்சியோடு கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு வருகைப்புரிந்த இயக்க முன்னோடிகள்,நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட அனைவரையும் வேலூர் மாநகர மகளிணித் தலைவர் மருத்துவர் தி. அனிதா அனைவரையும் வரவேற்றார். மாநில மகளிரணி துணைச் செயலாளர் ந.தேன்மொழி இவ்விழாவை ஒருங்கிணைத்தார்.
வேலூர் மாவட்ட கழக தலைவர் வி.இ.சிவக்குமார், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன், மாவட்ட காப்பாளர் வி.சடகோபன், மாவட்ட செயலாளர் உ.விஸ்வநாதன், பெரியார் பெருந்தொண்டர் கு. இளங்கோவன், லெப்டினன்ட் கர்னல் தியாகராஜன், மாவட்ட துணைத் தலைவர் சிகாமணி, மாவட்ட துணைச்செயலாளர் மு. சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் சி.லதா, மகளிரணி ச.ஈஸ்வரி, மாவட்ட மகளிரணி செயலாளர் பெ.இந்திராகாந்தி, கழக முன்னோடி நெ.கி.சுப்பிரமணியன், வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மா.அழகிரிதாசன், வேலூர் மாநகர தலைவர் ந.சந்திரசேகரன், மாநகர செயலாளர் அ. மொ.வீரமணி, குடியேற்றம் நகர கழக தலைவர் சி. சாந்தகுமார், நகர அமைப்பாளர் வி.மோகன், குடியேற்றம் மகளிரணி ச.கலைவாணி, மகளிர் பாசறை ச.ரேவதி, மாணவர் கழக வி.சி.சங்கநிதி, குடியேற்றம் இ.வெண்மதி, சென்னை மு.தினேஷ், பெரியார் பிஞ்சுகள் ரே.தி.மகிழன், ரே.தி.நிலன், புன்னகை மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டு பவள விழாக் கண்ட தோழர் கலைமணியின் இயக்க அர்ப்பணிப்பு குறித்தும், குடும்ப அரவணைப்பு குறித்தும் வாழ்த்தி பேசினார்கள்.
இறுதியாக மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் மருத்துவர் பழ. ஜெகன்பாபு அனைவருக்கும் நன்றி கூறினார்.