பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுவதென பாடலூர் ஒன்றிய கலந்துரையாடலில் முடிவு

1 Min Read

அரசியல்

பெரம்பலூர், ஜூன் 30 – பெரம்பலூர் மாவட்டம்ஆலத்தூர் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் 29.6.2023 அன்று மாலை 5 மணியளவில் பாடலூர் ரமேஷ் சிகை திருத்தக வளாகத்தில் தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.

பெரம்பலூர் மாவட்ட தலைவர் சி. தங்கராசு, மாவட்ட செயலா ளர் மு.விஜயேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் செ. தமிழரசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அ.சரவணன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். தோழர்கள் தங்களை அறிமுகம் செய்த பின்னர் இயக்கப்பணிகள், செயல்முறைகள் குறித்து கலந்து ரையாடப்பட்டது.

கழகப் பொதுக்குழு தீர்மானங்களை சிறப்பாக செயல்படுத்துவ தெனவும், கிளைகள் தோறும் கொடியேற்றுவதெனவும், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா – தெருமுனைக் கூட்டங்களை சிறப்பாக நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது.

பங்கேற்றோர்: கூட்டத்தில் ஆலத்தூர் ஒன்றிய தலைவர் வி. ரவிக்குமார், ஒன்றிய செயலாளர் அரங்க.வேலாயுதம், மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் இர.மணிமேகலை, வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் இரா. சின்னசாமி, ஆகாஷ் ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா தமிழரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *