மோரனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா

1 Min Read

கிருட்டினகிரி, மே 7– கிருட்டினகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் மோரனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்  பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மா.சிவசங்கர்  தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் மு.கா. சித்ரா, இளவரசு, ஜாய்ஸ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக புரட்சி கவிஞர் பாரதிதாசன் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் பள்ளியின் தலை மையாசிரியர் மா.சிவசங்கர் பேசியதாவது:, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பகுத்தறிவு சிந்தனைகள், தமிழ் மொழிப் பற்று, தமிழின் சிறப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சமூக சீர்திருத்தம், பெண் விடுதலை, பெண்கல்வி, கைம்பெண் மறுமணம். தொழிலாளர் விடுதலை, சமூகநீதி, சமத்துவ சிந்தனை உள்ளிட்ட புரட்சிக் கவிஞர் அவர்களின் அரும் பெரும்பணிகளை தலைமை ஆசிரியர் விளக்கிப் பேசினார். நிகழ்ச்சியில் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் தமிழாசிரியர்  மங்கம்மாள் நன்றி யுரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *