விளக்க பொதுக்கூட்டம்
அரூர், மே 7– அரூர் கழக மாவட்ட இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இராமியம்பட்டி பேருந்து நிலையத்தில் 27-4-2025 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.
தந்தை பெரியார் சிலைக்கு மாலை
முன்னதாக கழ கத் தோழர்கள் ஊர் வலமாக சென்று கொள்கை முழக்கமிட்டு தந்தை பெரியார் சிலைக்கு பெரியார் பெருந்தொண்டர் ஆர்.வி. சாமிக்கண்ணுவின் வாழ்விணையர் ருக்கு அம்மாள் மாலை அணி வித்தார். மாவட்ட கழக இளைஞரணி – மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்கு திரா விடர் மாணவர் கழக பொறுப்பாளர் ஆ.பிரதாப் தலைமை தாங்கினார். மாணவர் கழக செயலாளர் கு.ஹரிகரன் வரவேற்று பேசினார்.
மாவட்ட கழக காப்பாளர் வெ.தன சேகரன், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோ, திமுக கலை இலக்கிய பேரவை மாவட்ட தலைவர் பெ. அன்பழகன், கடத்தூர் நகர தலைவர் நெடுமிடல், ஒன்றிய செயலாளர் சிந்தை பச்சையப்பன், மாவட்ட மாணவர் கழக தலைவர் சாய்குமார், மு.சிவக்குமார், வேப்பிலைப்பட்டி சூர்யா ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
திராவிடர் நாடா? தமிழர் நாடா?
திராவிடர் நாடா? தமிழர் நாடா? என்ற தம்பி பதிப்பகம் வெளியீடான நூலை திமுக மாநில ஆதிதிராவிட நலக்குழு துணை செயலாளரும், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவருமான சா.இராஜேந்திரன் வெளியிட, திமுக ஒன்றிய செயலாளர் நெப்போலியன், மேனாள் ஒன்றிய திமுக செயலாளர் நாகராசன், உள்ளிட்ட தோழர்கள் பெற்றுக் கொண்டனர். கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை தொடக்க வுரையாற்றினார்.
மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, விசிக ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் ராமலிங்கம் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கி மாவட்ட திமுக மாணவர் அணி பொறுப்பாளர் சுர்ஜித், திராவிட இயக்கமும் இட ஒதுக்கீடும் பற்றி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் த.மு.யாழ் திலீபன், தந்தை பெரியார்-அண்ணல் அம்பேத்கர் ஓர் ஒப்பீடு, புரட்சிக் கவிஞரின் சமூக சிந்தனைகள் பற்றி தலைமை கழக ஒருங்கி ணைப்பாளர் ஊமை. ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணைச் செயலாளர் வழக்குரைஞர் வடிவேலன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் பெ. கல்பனா, விடுதலை வாசகர் வட்ட தலைவர் வ.நடராஜன், திமுக ஒன்றிய துணை செயலாளர் பாண்டியன், திமுக தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்கள் கண்ணப்பன் வேலுசாமி உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத் குமார் நன்றி கூறினார்.