கழக தோழரின் சூப்பர் பாஸ்ட் லாண்டரி கடை துவக்க விழா

1 Min Read

வேலூர், மே 7– காட்பாடி, காந்திநகர், காங்கேய நல்லூர் சாலையில் 2/5/2025 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் வேலூர் மாவட்ட கழக துணைச் செயலாளர் மு.சீனிவாசனின் சூப்பர் பாஸ்ட் லாண்டரி கடையை வேலூர் மாவட்ட கழக தலைவர் வி.இ. சிவகுமார் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.  பெரியார் பெருந்தொண்டர் கு.இளங்கோவன் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார், வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு ஸ்டீம் அயர்னிங்கை வைத்தார், சீனிவாசன் வாழ்விணையர் சீ.லதா அனைவரையும் வரவேற்றார், மகன் சீ.புவன், சீ.சுஜன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் உ.விஸ்வநாதன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பரசன் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ந.தேன்மொழி பொதுக்குழு உறுப்பினர் சி.லதா,  மாவட்ட துணைத் தலைவர் க.சிகாமணி, வேலூர் மாநகர தலைவர் ந.சந்திரசேகரன் வேலூர் மாநகர செயலாளர் அ. மொ.வீரமணி,  குடியேற்றம் நகர தலைவர் சி.சாந்தகுமார் குடியேற்றம் மகளிர் அணி ச.கலைவாணி குடியேற்ற மகளிர் பாசறை ச.ரேவதி மாணவர் கழக வி.சி.சங்கநிதி, குடியேற்றம் இ.வெண்மதி சென்னை மு.தினேஷ், உறவினர்கள் வேலு, செல்வி, பாபு, சுரேஷ், கழக தோழர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *