வேலூர், மே 7– காட்பாடி, காந்திநகர், காங்கேய நல்லூர் சாலையில் 2/5/2025 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் வேலூர் மாவட்ட கழக துணைச் செயலாளர் மு.சீனிவாசனின் சூப்பர் பாஸ்ட் லாண்டரி கடையை வேலூர் மாவட்ட கழக தலைவர் வி.இ. சிவகுமார் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். பெரியார் பெருந்தொண்டர் கு.இளங்கோவன் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார், வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு ஸ்டீம் அயர்னிங்கை வைத்தார், சீனிவாசன் வாழ்விணையர் சீ.லதா அனைவரையும் வரவேற்றார், மகன் சீ.புவன், சீ.சுஜன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் உ.விஸ்வநாதன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பரசன் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ந.தேன்மொழி பொதுக்குழு உறுப்பினர் சி.லதா, மாவட்ட துணைத் தலைவர் க.சிகாமணி, வேலூர் மாநகர தலைவர் ந.சந்திரசேகரன் வேலூர் மாநகர செயலாளர் அ. மொ.வீரமணி, குடியேற்றம் நகர தலைவர் சி.சாந்தகுமார் குடியேற்றம் மகளிர் அணி ச.கலைவாணி குடியேற்ற மகளிர் பாசறை ச.ரேவதி மாணவர் கழக வி.சி.சங்கநிதி, குடியேற்றம் இ.வெண்மதி சென்னை மு.தினேஷ், உறவினர்கள் வேலு, செல்வி, பாபு, சுரேஷ், கழக தோழர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.