மதுக்கரை, ஜூன் 30 – கோவை மதுக்கரை வட்டம், மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் இருதயம் காப்போம் திட்டத்தின் மூலம் இருதய பாதுகாப்பு கூட்டு மருந்துகளை இடைநிலை சுகாதார நிலைய பணியாளர்களிடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அருகில் தேசிய நல்வாழ்வுக்குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஸ், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.அருணா, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ராஜன், மலுமிச்சம்பட்டி நகராட்சித் தலைவர் நூர்ஜஹான் நாசர், மலுமிச்சம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள், ஆகியோர் உள்ளனர்.