திருவள்ளூர், மே 6 திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி வேத பாடசாலை மாண வர்கள் 3 பேர் பலியாகி உள்ளனர்
பாராயணப் பயிற்சி
சென்னை சேலையூரில் உள்ள குருகுலத்தில் இருந்து பாராயணம் படிப்பதற்காக 5 பேர் அக்கோயிலுக்கு வந்துள்ளனர். அதில் 3 பேர் அதிகாலையில் இருந்து பசியோடு அமர்ந்து கொண்டு வேதம் கற்ற பார்ப்பனர் மந்திரங்களைச் சொல்லச் சொல்ல அம்மாணவர்கள் பதிலுக்குச் சொல்லி கொண்டு இருந்தனர்.
மயங்கி குளத்தில் விழுந்தனர்
இந்த நிலையில் குளத்தின் கடைசிப் படியில் அமர்ந்திருந்த மூவரும் பாராயணம் படிக்க குளத்தில் இறங்கினர். பசி மயக்கத்தில் இருந்த அவர்கள் குளத்தின் படியில் நிற்க முடியாமல் மயங்கி குளத்திற்குள் விழுந்துவிட்டனர். இந்த நிலையில் வேதம் சொல்லிக்கொண்டு இருந்த பார்ப்பனருக்கும் நீச்சல் தெரியாததால் குளத்தின் படிக்கட்டு களைக்கடந்து மேலே வந்து கோவிலில் உள்ள வர்களிடம் கூறியுள் ளார்.
இந்த நிலையில் உட னடியாக காப்பாற்ற யாரும் வராததால் மாண வர்கள் மூன்று பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாகப் பலியாகினர்.
உயிரிழந்த மூவர் யார்?
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்கள், குன்றத் தூரைச் சேர்ந்த ஹரிஹரன் (வயது 17), அம்பத்தூரைச் சேர்ந்த வெங்கட்ரமணன் (வயது 19), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வீரராகவன் (வயது 24) என்பது தெரிய வந்தது. அவர்களின் உடல்களை மீட்டு உடற் கூராய்விற்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
கோடைக்கால சிறப்பு பயிற்சி வகுப்புகளைப் போல குருகுலமும் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் பாராயண முகாம் நடத்தியுள்ளது. இதில் கலந்துகொண்டவர்களில் மூவர்தான் குளித்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சிறுமி உயிரிழப்பு
இதே போன்று 29.04.2025 அன்று மதுரை கலைஞர் கருணாநிதி நகரில் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. அப்போது திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து, பள்ளி தாளா ளர் மற்றும் அப் பள்ளியில் வேலைசெய்தவர்களும் கைது செய்யப்பட்டனர். அதே போல் மூன்றுபேர் உயிரிழந்ததற்கு காரண மாக குருகுலத்தை நடத்தியவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?