கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த விழா நிகழ்ச்சி நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் வைத்து நடைபெற்றது.
மாவட்ட கழகத்தலைவர் மா.மு.சுப்பிரமணியம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். புரட்சிக்கவிஞர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. திராவிடர்கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார்.
பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ. சிவதாணு, கழகத் தோழர்கள் எ.ச. காந்தி, பா.சு.முத்து வைரவன், பெரியார் பெருந்தொண்டர் ஞா.பிரான்சிஸ், மாநகர கழக தலைவர் ச.ச. கருணாநிதி, கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, கன்னியாகுமரி கிளைக் கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் உட்பட பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
உலக புத்தக நாள்
சிறப்பு விற்பனை
உலக புத்தக நாளை முன்னிட்டு 29.4.2025 அன்று மாலை தாம்பரம் பெரியார் புத்தக நிலையத்தில் 50% சதவீத தள்ளுபடி விற்பனை நடைபெற்றது.
கழகப் பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ் உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு 10 பாகம் ரூபாய் 2000 மற்றும் பெரியாரின் அடிச்சுவடுகள் 7 தொகுதிகள் ரூபாய் 623 ஆக மொத்தம் ரூபாய் 2623 க்கு மொத்தம் 17 புத்தகங்கள் மகிழ்வுடன் வாங்கினார்.
தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன் புத்தகங்களை வழங்கினார்கள்.
சோழிங்கநல்லூர் மாவட்ட கழக பொதுக்குழு உறுப்பினர் விடுதலை நகர் பி.சி.ஜெயராமன், கூடுவாஞ்சேரி மா.இராசு மற்றும் ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.