நாகர்கோவில், மே 7- நாகர் கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு பாராட்டு விழா பொதுக் கூட்டம் மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது.
பொதுக்குழு உறுப்பி னர் மு.இராசசேகர் வரவேற்புரை யாற்றினார். திராவிடர்கழக மாவட்டச்செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவு ரையாற்றினார். கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, குமரி-க.யுவான்சு, பெருமாள் ஆகியோர் புரட்சிக்கவிஞரின் பாடலை பாடினார்கள்.
காப்பாளர் ம.தயாளன், மாவட்ட ப.க.தலைவர் உ.சிவதானு, சிபிஅய் மாவட்ட செயலாளர் சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.
கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் சிறப்பு ரையாற்றினார். பாவேந்தரின் சிறப்பு, தந்தை பெரியாருடைய தொண்டுகள், பெருந்தலைவர் காமராசர், அண்ணல் அம்பேத் கர், அறிஞர் அண்ணா தமிழர் தலைவர் ஆசிரியர், டாக்டர் கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்களின் தொண்டுகளை எடுத்துக்கூறி திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும் பட்டியலிட்டார். பா.ஜ.க வின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டியதின் நோக்கத்தையும் எடுத்துக் கூறினார்.
மாவட்ட கழகத் துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பெரியார் பெருந்தொண்டர் ஞா.பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கழக துணைச் செயலாளர் சி.அய்சக்நியூட்டன், நாகர்கோவில் மாநகர கழக தலைவர் ச.ச கருணாநிதி, இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், பகுத்தறிவாளர்கழக மாவட்டச் செயலாளர் பெரியார் தாஸ், கழகத் தோழர்கள் பி.கென்னடி, பா.சு.முத்துவைரவன், டாக்டர் அருள் அமலன், தி.ஞானவேல், மு.இராசன், மு.பால்மணி, வில்லுக்குறி செல்லையன் மற்றும் ஏராளமானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
நாகர்கோவில் பூங்காவில் தொடங்கப்டும் அறிவியல் மய்யம் கோரளங்கத்திற்கு தந்தை பெரியாருடைய பெயரை சூட்ட வேண்டும் எனவும், குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைய காரணமாக இருந்த தியாகி மார்ஷல் நேசமணிக்கு உறுதுணையாக இருந்த தியாகி பொன்னப்பருக்கு குமரி மாவட்டத்தில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதல மைச்சருக்கு நன்றியினை தெரிவிப்பது, தோவாளையில் நடைபெற்று வரும் கவிமணி மணிமண்டப பணியினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், சுதீந்திரம் கிராம அலுவலகத்தில் உள்ள கவிமணி சிலையை சுதீந்திரம் எஸ்.எம். பள்ளி வளாகத் திலே சிலையை நிறுவ வேண்டி தமிழ்நாடு அரசை வலியுறுத்துவது எனவும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.