“காந்தியாரிடம் எனக்கு நம்பிக்கை இல்லை” டாக்டர் அம்பேத்கர் அறிக்கை

1 Min Read

அகமதாபாத்தில் கூடிய ஒரு ஒடுக்கப்பட்டோர் கூட்டத்தில் பேசுகையில் டாக்டர்  அம்பேத்கர் கூறியதாவது:-

அரசியல்

எனக்குக் காங்கிரசிடமும் காந்தியாரிடமும் நம்பிக்கையே கிடையாது. காந்தியார் மூலமோ, காங்கிரஸ் மூலமோ ஒடுக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய நன்மையும் கிடையாது. வட்டமேஜை மாநாட்டுக் காலத்தில் எனக்குக் கிடைத்த அனுபவத்தினால் காந்தியாரிடம் எனக்கிருந்து வந்து நம்பிக்கை சிதறுண்டுவிட்டது. எல்லாக் கட்சியாரும் சம்மதித்தால் சட்டசபைகளில் ஒடுக்கப்பட்டவர்களுக்கென இடம் ஒதுக்கலாம் எனக் காந்தியார் முதலில் சொன்னார். ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடம் ஒதுக்க முஸ்லிம்கள் சம்மதித்தார்கள். ஆனால், காந்தியார் மட்டும் இணங்கவில்லை. அம்மட்டோ மந்திரி சபைகளில் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கானவை ஆராய்ந்து வேண்டுவன செய்ய முன்னிருந்த பம்பாய் மந்திரிகள் பல கமிட்டிகளை நியமித்திருந்தார்கள். அந்தக் கமிட்டிகளின் சிபாரிசுகளை அமலில் கொண்டுவர பம்பாய் காங்கிரஸ் மந்திரிகள் இதுகாறும் எதுவும் செய்யவில்லை. ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்றில் ஒரு தனி இயக்கம் காண வேண்டும் அல்லது சுயேச்சைத் தொழிற் கட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும். சுயேச்சைத் தொழிற் கட்சிக்கு நாளுக்கு நாள் செல்வாக்கும் சக்தியும் பெருகி வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *