திருவிடைமருதூர், மே 5- திருவிடைமருதூர் ஒன்றிய கழக தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் 01/05/2025 வியாழக் கிழமை மாலை 6 மணிக்கு திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம்.என்.கணேசனது இல்லத்தில் மாவட்ட கழக தலைவர் வழக்கறிஞர் கு.நிம்மதி தலைமையிலும், பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.விஜயகுமார் முன்னிலையில் நடைபெற்றது.
தீர்மானங்கள்:
இரங்கல் தீர்மானம் (திருவிடைமருதூர் ஒன்றியம் கல்யாணபுரம் பெரியார் பெருந்தொண்டர் இரா.ஜோதி மறைவிற்கும், திருநாகேஸ்வரம் மேனாள் தலைவர் மு.கோவிந்தராஜ் மறைவிற்கும் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றியம் முழுவதும் கழகக் கொடி ஏற்றுவது மற்றும் தொடர் கிராமப் பிரச்சாரம் செய்வது என தீர்மானிக் கப்பட்டது.
திருவிடைமருதூர் ஒன்றியத்தில் உள்ள கழகத் தோழர்கள் இல்லத்தில் கழகக் கொடியை ஏற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
விடுதலை, உண்மை சந்தாகளை புதுப்பிப்பதுடன் அதிக அளவில் விடுதலை சந்தாக்களை சேர்ப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.