பெரியார் விடுக்கும் வினா! (1638)

1 Min Read

கடவுள் நம்பிக்கை போனால், மக்களிடம் கடவுள் நம்பிக்கையான முட்டாள்தனத்தை ஊட்டாமலிருந்தால் தாங்கள் வாழ முடியாது என்று பணக்காரர்கள் நம்புகின்றனர். அதனால் தங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் மக்களுக்கு அதனை ஊட்டுகின்றனர். அரசாங்கமும் மக்களை முட்டாள்களாக வைக்காவிட்டால் தாங்கள் ஆட்சி செய்ய முடியாதே? பதவிக்கு வர முடியாதே? என்று பயந்து மூடநம்பிக்கையை வளர்க்கப் பாடுபடுகிறது. பார்ப்பனர்களும் இவைகள் அழிந்தால் தங்களின் சுகபோக வாழ்வு, பெருமை இவைகள் அழிந்துபோய் விடுமே என்று பயந்து இவைகளைப் பாதுகாக்கப் பாடுபடுகின்றனர். இவை நம்மை காட்டுமிராண்டியாக்கிட எடுக்கின்ற முயற்சியன்றி வேறு என்ன?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *