கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள் இன்று (5.5.1818)

1 Min Read

உலக வரலாற் றில் அழியாத புகழுடன் தலை நிமிர்ந்து நிற்கும் மாமேதை கார்ல் மார்க்ஸ் 1818 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி (ஜெர்மனி) புருசியாவில் ட்ரையர் நகரில் பிறந்தார்.

இவர் அறிவியல் சார்ந்த பொதுவுடைமைக் கொள்கையை வகுத்தவருள் முதன்மையானவர். அரசியல், பொருளாதார வரலாற்றில் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வ றிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாள ராக, புரட்சியாளராக கருதப்படுபவர்.

பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும், கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார். ஆனால், இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப் படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்துள்ளது.

பொதுவுடைமைக் கொள்கை வகுப்பாளர்களில் முக்கியமான  ஒருவரான கார்ல் மார்க்ஸ் தனது 64 ஆவது வயதில் (1883) மறைவுற்றார்.

அயோத்தி தாசர் நினைவு நாள் இன்று (5.5.1914)

இந்நாள் - அந்நாள்

சமூக சீர் திருத்தவாதி, சித்த மருத்துவர், பத்திரிகை யாளர் மற்றும் தத்துவ ஞானி ஆவார். ஒடுக்கப்பட்ட மக் களுக்காகவும் ஜாதி பாகு பாட்டிற்கு எதிராக 19 ஆம் நூற்றாண்டில்  போராடிய முன்னோடிகளில் முதன்மை யானவர்.

ஜாதி ஒழிப்புப் போராட்டம்  ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்தது திராவிட மகாஜன சபை நிறுவியது (1891)”ஒரு பைசா தமிழன்” என்ற பத்திரிகை வெளியிட்டது (1907) பவுத்த மதத்தை தழுவியது மற்றும் அதனைப் பரப்பியது அயோத்தி தாசர் முதல் முதலாக தமிழ்நாட்டின் பவுத்தம் செழித்து இருந்ததையும் இன்றளவும் மக்களின் வாழ்வியலில் பவுத்த நெறிகளின் அடையாளங்களையும் சான்றுகளோடு எடுத்துரைத்து தமிழ் நாட்டின் பவுத்தநெறி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். ஆதி திராவிடர் என்ற அடையாளத்தை முன்னிறுத்தியவர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *