கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?

2 Min Read

வீட்டிலேயே எளிதாக கண்டுபிடிக்கலாம்!

சென்னை, மே4 கோடை காலம் (Summer) தொடங்கி விட்டாலே அனைவருக்கும் சட்டென நினைவுக்கு வருவது மாம்பழங்கள் (Mango) தான். சேலத்து மாம்பழம், மல்கோவா மாம்பழம் என விதவிதமான மாம்பழங்கள் சந்தைகளை நிரப்ப தொடங்கியிருக்கின்றன. மாம்பழத்தின் சுவை மிகவும் அலாதியானது என்பதால் அதனை விரும்பாதவர்களே இல்லை எனலாம். ஆனால் மாம்பழத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால் சில நேரங்களில் அதனை போலியாக பழுக்க வைத்து விற்கப்படும் மாம்பழங்கள் தான்.  சில பழங்கள் கார்பைடு (Carbide)  பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டிருக்கும் பழங்கள் சுவை குறைவதோடு உடல் நலனுக்கும் தீங்கு விளை விக்கும். ஆனால் எந்த மாம்பழங்கள் கார்பைடு பயன்படுத்தப் படவில்லை என்பதை கணிப்பது கடினம்.

இந்த சந்தேகத்தை போக் கும் வகையில் புகழ்பெற்ற லைஃப்ஸ்டைல் கோச் லூக் கவ்டினோ என்பவர்  தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சில பரிசோதனை முறைகளை பகிர்ந்துள்ளார். இந்த சோதனைகள் மூலம் கார்பைடு கலந்த மாம்பழங்களை அடையாளம் காணலாம் என அவர் சொல்கிறார். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கார்பைடு பயன்படுத்தப்பட்ட பழங்களை எப்படி கண்டுபிடிப்பது?

லூக் கவ்டினோ முதலில், மாம்பழத்தின் தோலை கவனமாக பாருங்கள் என்கிறார். பழத்தின் நிறம் எல்லா பக்கமும் ஒரே மாதிரியாக இருக்கும்போது அது இயற்கையாக பழுத்த பழம் என்கிறார்.  ஆனால், தோலில் சிறிய கருப்பு புள்ளிகள் அல்லது கீறல்கள் தெரிந்தால், அது கார்பைடு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்.

அதே போல மாம்பழத்தை ஒதுக்கி அழுத்தி பாருங்கள் என்கிறார்.  இயற்கையாக பழுத்த மாம்பழம் கடினமாக இருக்காது. உறுதித் தன்மை குறைவாகவும் மென்மையாகவும் இருக்கும். கார்பைடால் பழுத்த பழம்  உறுதியாக இல்லாமல் வழக்கத்தை விட அதிக மென்மையாக இருக்கும் என அவர் சொல்கிறார்.

ஒரு தண்ணீர் நிரம்பிய ஜாரில் மாம்பழத்தை போட்டு பாருங்கள் என்கிறார். மாம்பழம் ஜாரில் கீழே போனால் அது இயற்கையாக பழுத்த பழம் என்றும் அர்த்தம். அதே பேல மாம்பழமானது தண்ணீரில் மிதந்தால் அது கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழம் என்று அர்த்தம் என்று அவர் தெரிவித்தார்.

இது மிகவும் எளிமையான பரிசோதனை. எல்லோரும் வீட்டிலேயே செய்யக்கூடிய ஒன்று. உங்கள் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவராலும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள முடியும். இந்த பரிசோதனைகள் அதிகபட்சம் சரியாக முடிவைத் தரும். ஆனால் இது முழுமையான பரிசோதனை அல்ல என்று லூக் கவ்டினோ எச்சரிக்கிறார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *