திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம், விஷமங்களத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுற்றுச் சுவரில் வரையப்பட்டுள்ள திருவள்ளுவர் படம் காவி வண்ணத்தில் உள்ளது. இது அரசுப் பள்ளி, தமிழ்நாடு அரசு பயன்படுத்தும் படத்தினை வரையாமல் மதவாத சக்திகள் பயன்படுத்தும் படத்தினை வரைந்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை தமிழ்நாடு அரசின் பார்வைக்கு கொண்டு வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அரசு பள்ளிகளில் எந்த திருவள்ளுவர் படத்தினை பயன்படுத்துகிறார்கள் என்று கண்காணித்து, இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.