கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 3.5.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*மோடி அரசு அறிவித்த ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பாஜக ஆதரவாளர்கள் மற்றும் காரியகர்த்தாக்கள் எதிர்ப்பு.

* இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

*11 ஆண்டுகால “பிடிவாதமான மறுப்பு”க்குப் பிறகு மோடி அரசாங்கத்தை ஜாதி வாரி கணக்கெடுப்பு கோரிக்கையை ஏற்க வைத்துள்ளார் ராகுல் என காங்கிரஸ் பாராட்டு.

* ‘சபர்மதி எக்ஸ்பிரஸில் இருந்த காவலர்கள் 2002 கோத்ரா ரயில் எரிப்பைத் தடுத்திருக்கலாம். ரயிலில் ஏறத் தவறிய 9 ரோந்து காவலர்களை பணி நீக்கம் செய்ததை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 2027 சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு, பத்திரிகையாளர்களுடன் சந்திப்பை அதிகப்படுத்தி வருகிறார் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ்

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *