ஜெயங்கொண்டம் வை.செல்வராஜ் மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை

1 Min Read

ஜெயங்கொண்டம், மே 2- ஜெயங்கொண்டம் நகரதிராவிடர் கழக மேனாள் தலைவர் வை.செல்வராஜ் (வயது 73) 26.4.2025 சனிக்கிழமை காலை11.30 மணியளவில் மறைவுற்றார்.

செய்தியறிந்த கழகப் பொறுப்பாளர்கள் தலைமை செயற்குழு உறுப்பினர் க. சிந்தனைச் செல்வன், மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் மு. கோபால கிருஷ்ணன், கழக காப் பாளர் சி. காமராஜ், மாவட்ட துணை செய லாளர் க.கார்த்திக், பொதுக்குழு உறுப்பினர் ரத்தின. ராமச்சந்திரன் மாவட்ட தொழிலாளரணி செயலாளர் மா.கருணாநிதி, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் க.செந்தில் ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா. தமிழரசன், ஜெயங் கொண்டம் நகரத் தலைவர் துரை. பிரபாகரன், ஒன்றிய தலைவர் ஆ.ஜெயராமன், தாபழூர் ஒன்றிய தலைவர் சிந்தாமணி ராமச்சந்திரன், இரா.ராஜேந்திரன், துணைத் தலைவர் சி. தமிழ் சேகரன் உத்திரக்குடி கலைவாணன், சீ.குமார்உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று மாலை வைத்து மரியாதை செய்தனர்.

இறுதிநிகழ்ச்சி

அவரது இறுதிநிகழ்ச்சி கரடிகுளம் சுடுகாட்டில் நடைபெற்றது. அவரது வாழ்விணையர் சுசீலா அம்மையார், மகன் கவாஸ்கர், மகள் சுகந்தி ஆகியோருக்கு கழகப் பொறுப்பாளர்கள் ஆறு தலை தெரிவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *