கபிஸ்தலம், மே 2- கும்பகோணம் கழகம் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலத்தில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சிந்தனை களம் – 3 அண்ணல் அம்பேத்கர் ,புரட்சி கவிஞர் பாரதிதா சன் இருவரது பிறந்த நாள் விழாவாக நடைபெற்றது .
நிகழ்வு 2025 ஏப்ரல் 26 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி பழைய வளாகத்தில் நடைபெற்றது.
மிக சரியாக மாலை 6 மணியிலிருந்து 6.30 வரை நட்புறவாடலும் 06.30 மணிக்கு சிந்தனைக் களம் அமர்வு -3 ன் முதல் அமர்வு தொடங்கியது.
கூட்டத்திற்கு கோவி. பெரியார் கண்ணன் தலைமையேற்றார்கள்.
சே.ஆனந்தகுமார் வர வேற்புரையாற்றினார்.
“வடக்கில் உதித்த சூரியன்” என்னும் தலைப் பில் சிறப்புரையாற்ற வருகை தந்த மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சி. ரமேசை மாநில பகுத்தறிவாளர் கழக பொது செயலா ளர் வி.மோகன் அறிமுகப் படுத்தி பேசினார்.
தொடர்ந்து நீடாமங்கலம் சி. ரமேஷ், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தொண்டு , வாழ்க்கை, அவருக்கும் பெரியாருக்கும் இருந்த உறவு, போராட்ட களத்தில் இருவருக்கும் இருந்த ஒற்றுமை, இருவருடைய நட்பு ஆகியவற்றை மிகத் தெளிவாக அழகாக எளிமையாக பொருத்தி உரையாற்றியது சிறப்பாக இருந்தது .
அவருக்கு ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் மு சேகர் பய னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
தொடர்ந்து இரண் டாம் அமர்வு “ கொட்டு முரசே” என்னும் தலைப் பில் புரட்சிக்கவிஞர் புரட் சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களைப் பற்றி பொதுக்குழு உறுப்பினரும் வழக்குரைஞரான சு.விஜயகுமார் மிக எளிமை யாக தொடங்கி புரட்சி கவிஞர் பாடல்களையும் பாடி அதன் பொருள் கூறி, கவிஞர் எதனால் இப்படி சாடினார் என்பதை எடுத்துக்காட்டினார்.
சமுதாயப் பணியை கவிஞர் பெரியார் வழியில் அதிரடியாக எடுத்துக் கூறியதை தெளிவாக எடுத்துச் சொன்னார்.
பெரியாரின் பெரும் பணி பற்றி கவிஞர் கூறி யதை எல்லாம் சிறப்பாக பாடி விளக்கினார்.
ஜாதிக்கொடுமையை கவிஞர் சாடிய விதம், மக்கள் மூட நம்பிக்கையில் இருப்பதை சாடிய விதம் பற்றி விரிவாக கூறினார்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தன்னுடைய பாடல்களில் தந்தை பெரியாரின் கொள் கைகளை எப்படி எல்லாம் கையாண்டார் என்பதை எல்லாம் எடுத்துச் சொல்லி, பாரதியாருக்கும் பாரதிதாசனுக்கும் உள்ள வேற்றுமைகளை எடுத்துரைத்தார்.
முன்னதாக உரையா ளர் வழக்குரைஞர் சு.விசய குமாரை அறிமுகம் செய்து வி.மோகனும், உரையாளருக்கு மாவட்ட திராவிடர் கழக துணைத்தலைவர் அழகு வேலும் பயனாடையும் அணிவித்து சிறப்பு செய்தார்கள்.
இறுதியில் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் கு.பசெ.சங்கர் நன்றி கூறிட கூட்டம் முடிவுற்றது.
இயக்க தோழர்களைத் தாண்டி பொது மக்கள் குறிப்பாக வெளியூரிலிருந்து வந்து கலந்துகொண்டது இக்கூட்டத்தின் சிறப்பு ஆகும்.