சட்டப்பேரவையில் சிறப்பாக செயல்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு கட்சி உறுப்பினர்கள் வாழ்த்து

viduthalai
1 Min Read

சென்னை,மே2- சட்டமன்றக் கூட்டத் தொடரின் இறுதி நாளான 29.4.2025 அன்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகளின் போது சிறப்பான முறையில் பதிலளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

சட்டமன்ற எதிர்க் கட்சி துணைத் தலைவர் உதயகுமார். எதிர்க்கட்சி கொறடா வேலுமணி. தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார். பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் கோ.க. மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் சிந்த னைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள், கொங்கு தேசிய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ் வரன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப் பினருமான பேராசிரியர் ஜவஹிருல்லா. தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *