மகப்பேறு மருத்துவர் சரோஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

1 Min Read

அரசியல், தமிழ்நாடு

திருவள்ளூரில் வசித்து வரும் பிரபல மகப்பேறு மருத்துவர் சரோஜினி ஏகாம்பரத்திற்கு இந்திய மருத்துவ கழகத்தின் (IMA) சார்பில்  ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ 30.6.2023 அன்று வழங்கி சிறப்பிக்கப்பட்டது.  மருத்துவத் துறையிலும் , மனித நேய சேவைகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்து , நோயாளிகளின் கவலை தீர்க்கும் மருத்துவ மாமணியாக திகழ்ந்து வரும் மருத்துவர் சரோஜினியின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில் இந்த விருது அமையப் பெறும் என்ற வாழ்த்துரைகளுடன் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது.  பின்னர் அவர் தனது ஏற்புரையில்,   தந்தை பெரியாரின் கொள்கையை பின்பற்றி வாழ்ந்து  வருவதினாலே தான் இது போன்ற விருதுகளை தன்னால் பெற முடிந்தது என்றும்,  இன்றும் என்றும் நிலைத்து நிற்கக் கூடிய வாழ்க்கை தத்துவமாக பெரியாரின் கொள்கைகள் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும், நிற்க வேண்டும் என்றும் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *