சாமியார் யோக்கியதை

1 Min Read

பாலியல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் சதுர்வேதி சாமியார்
மே 23ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்

மகளிர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப்.30- தியாகராயர் நகரை சேர்ந்தவர் வெங்கட சரவணன் என்கிற பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி. இவர், சிறீ ராமானுஜ மிஷன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக இருந்தார். இவர் மீது கடந்த 2004ஆம் ஆண்டு ஆழ்வார்ப்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபர் புகார் மனு அளித்தார். அதில் சதுர் வேதி தன்னுடைய மனைவி, மகளை கடத்தி சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று தெரிவித்திருந்தார்.

இந்த புகார் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தினார்கள். நேபாள நாட்டில் வைத்து தொழில் அதிபரின் மனைவி, மகளை மீட்டு சதுர்வேதியை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. ஆனால் அவர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சதுர்வேதி தலைமறைவானார். இதனால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் கடந்த 2016ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் மீதான பாலியல் வழக்கு விசாரணை எழும்பூர் அல்லிகுளம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாததால் அவருக்கு எதிராககேட்டு பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் சதுர்வேதி வருகிற மே 23ஆம் தேதிக்குள் அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், இல்லையென்றால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என்றும் விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *