பெரியார் விடுக்கும் வினா! (1634)

1 Min Read

ஒரு மனிதன் எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும், எவ்வளவு பெரிய பதவி, அதிகாரம் உள்ளவனாக இருந்தாலும், எவ்வளவு பெரிய படிப்பு எம்.ஏ.,பி.ஏ, டாக்டர் படிப்புப் படித்திருந்தாலும் அவன் கோயிலுக்குப் போகிறான் என்றால் அவன் தன்னைச் சூத்திரன் என்பதாக ஒப்புக் கொண்டுதானே போகின்றான். அப்படி அவன் தான் சூத்திரன் என்பதை ஒப்புக் கொள்வதால்தானே அவன் கோயிலுக்குப் போய் வெளியே நிற்கின்றான். அப்படி இல்லையென்றால் பார்ப்பான் இருக்கிற இடம் வரைக்கும் செல்லலாமே! நம்மைவிட இழிவான பார்ப்பான் சிலைக்குப் பக்கத்திலிருந்து கொண்டு நம்மைப் பார்த்து “நீ சூத்திரன் – வெளியே நில்!” என்கிறான். இப்படி ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்துவதற்காகவா கோயில் இருக்க வேண்டும்? கடவுள் இருக்க வேண்டும்?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *