கழகத் தலைவரின் மே நாள் வாழ்த்து!

viduthalai
1 Min Read

திராவிடர் கழகம்

நாளை (1.5.2025) மே முதல் நாள்; தொழிலாளிகள் உரிமைகளை வென்றெடுத்த நாள்!

‘‘காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் – அவன்

காணத் தகுந்தது வறுமையாம்

பூணத் தகுந்தது பொறுமையாம்!’’

என்று கேட்டார் புரட்சிக்கவிஞர்.

தந்தை பெரியாரும், ம.சிங்காரவேலரும் சிறப்பாக இணைந்து பல ஆண்டு களுக்குமுன்பே மே தினம் போன்ற தொழிலாளர் திருவிழாவை – தெரு விழாக்களாக ஆக்கினார்கள்.

இன்று மேதினியெங்கும் மே நாள் விழா!

‘திராவிட மாடல்’ ஆட்சியே, தொழி லாளர்களுக்கான ஆட்சிதான்!

இந்நாளில், ‘‘தொழிலாளி என்றும் தொழிலாளியாகவே தொடராமல், முதலீட்டின் பங்காளியாக (உரிமையாளர்) மாற்றிய புதுமையைக் கண்டாகவேண்டும்’’ என்ற தந்தை பெரியாரின் விழைவு – முற்றான நடைமுறையாகி, அகிலத்தை ஆளவேண்டும்.

அனைவருக்கும் நமது மேதின வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

கி.வீரமணி

  தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
30.4.2025

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *