பெரியார் விடுக்கும் வினா! (1022)

1 Min Read

அரசியல்

மனிதரில் இலட்சக்கணக்கானோர் வீடின்றி வாழ வதைபடுவது கண்களுக்குத் தெரியவில்லையா? இந்த மனிதர்களைக் கவனியாது, இவர்களுக்கு வீடு வாசல் வேண்டாமா என்பதைக் கவனியாது, கடவுள் ஆலயங்களின் திருப்பணிப் பேரால் எவ்வளவோ பணத்தை விரயம் செய்யலாமா? பாலின்றி வாடும் பச்சைக் குழந்தைகள் இலட்சக் கணக்கில் இருக்க, நெய் என்பதைக் கண்ணில் கண்டறியாத குடும்பங்கள் எவ்வளவோ இலட்சம் இருக்க, பழனி, திருவண்ணாமலை, சிறீரங்கம் முதலிய இடங்களில் ஆயிரக்கணக்கான குடம் பாலையும் கொட்டிச் சாக்கடைக்குப் போய்ச் சேரும்படி பாழாக்குவதும், ஆயிரக்கணக்கான டின் நெய்யை விளக்கை எரித்தும், நெருப்பில் கொட்டியும் வீணாக்குவதும் சரியா? கடவுள் உணர்ச்சியை இப்படித்தான் காட்டுவதா? பாலும் நெய்யும் மக்களுக்கு உண்ண ஏற்பட்டதா? கல்லிலும், நெருப்பிலும் கொட்ட ஏற்பட்டதா? ஏ, ஆத்திகர்களே! உங்களை நோக்கி நான் இதைக் கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *