சுயமரியாதை இயக்க நூற்றாண்டை அரசு விழாவாகக் கொண்டாடவேண்டும்!

1 Min Read

சட்டப் பேரவையில் வி.சி.க. உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை

சென்னை, ஏப்.29 சுயமரியாதை இயக்க நூற்றாண்டை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டப் பேரவையில் அவர் ஆற்றிய உரையில் கூறியதாவது:

‘இந்த ஆண்டு 1925ஆம் ஆண்டில் தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டாகும். எனவே, அந்த நூற் றாண்டை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தலைநகர் சென்னையில், சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு நினைவுத் தூண் ஒன்றையும் அமைக்கவேண்டும் என்றும் பேரவைத் தலைவரை  கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *