இணையத்தில் டிரெண்டாகும் ஆளுநரே வெளியே போ ஹேஷ்டேக்!…

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, ஜூலை 1- ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக  “கவர்னரே வெளியே போ” என்ற ஹேஷ்டேக் இணையத்தில் பல ரால் பகிரப்பட்டு வருகிறது.

செந்தில் பாலாஜியை அமைச்சரவைப் பதவியிலிருந்து நீக்குவதாக 29.6.2023 அன்று இரவு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்திருந்தார். பின்னர் 5 மணிநேரத்தில் அந்த உத்தரவை நிறுத்திவைப்பதாகவும் தெரிவித்தார். 

அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றவழக்குகளில் சிக்கியுள்ள தால், அவர் அமைச்சரவை பதவியில் நீடித்தால் அமலாக்கத் துறை விசாரணை பாதிக்கப்படும் எனக்கூறி அவரை அமைச்சர வையிலிருந்து நீக்குவதாக ஆளு நர் 29.6.2023 அன்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற் படுத்தியது. ஆளுநரின் நடவடிக் கைக்கு ஆளும் கட்சியினரும் கூட்டணி கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

அமைச்சரை பதவியிலிருந்து நீக்குவதற்கு இந்திய அரசமைப் புப் படி ஆளுநருக்கு அதிகார மில்லை என அரசியல் கட்சிக ளைச் சேர்ந்த பலர் சுட்டிக் காட்டினர்.

ஆளுநரின் நடவடிக்கை தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், “கவர்னரே வெளியே போ” (#getoutgovernor) (#கவர்னரே வெளியேபோ) என்ற ஹேஷ் டேக் இணையத்தில் டிரெண் டாகி வருகிறது. 

ஆளுநர் – செந்தில் பாலாஜி விவகாரத்தில் பலர் டிவிட்டரில் இந்த ஹேஷ்டேக்கை பதிவிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருவதால் டிரெண்டாகி வரு கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *