கோவையில் த.வெ.க. கருத்தரங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய நிர்வாகிகள் மீது வழக்கு!

1 Min Read

கோவை,ஏப்.28- த.வெ.க. கட்சியின் வாக்குச் சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவையில் 2 நாட்கள் நடை பெற்றது.

இந்த கருத்தரங்கில் பங்கேற்க கட்சியின் தலைவர் விஜய் நேற்று முன்தினம் (26.4.2025) கோவைக்கு வந்தார்.

அப்போது அவரை பார்ப்பதற்காகவும், வரவேற்பதற்காகவும் கோவை விமான நிலையத் தில் அந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் அங்கு திரண்டனர்.

இதன் காரணமாக விமான நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. அத்துடன் விமான நிலையத்தில் இருந்த பொருட்களும் சேதப்படுத்தப்பட்டன.

மேலும் விமான நிலைய சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் த.வெ.க. மாநகர் மாவட்டச் செயலாளர் சம்பத் உள்பட பலர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதுபோன்று துணை முதலமைச்சர் கோவை வருகையையொட்டி விமான நிலைய சாலையில் தி.மு.க. கொடி நடப்பட்டு இருந்தது. அந்த கொடியையும் சிலர் சேதப்படுத்தியதாக தெரி கிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி, த.வெ.க.நிர்வாகிகளான திண்டுக்கல் செல்லமுத்து, ஒட்டன்சத்திரம் மனோஜ்குமார் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *