வேட்டவலம், ஏப்.28- திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஜமீன் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாண வர்களுக்கு பிரிவு உபசார விழா கடந்த 23-04-2025 அன்று நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சி.ஏ.முருகன் தலைமை வகித்தார். ஆசிரியர் அருண்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியை மார்கிரேட் மேரி வரவேற்புரையாற்றினார்.
விழாவில் மாணவர் களுக்கு திருக்குறள் புத்தகம், தமிழ் அகராதி, நோட்டுப் புத்தகம், பேனா, ஆன்லைன் பென்சில் அடங்கிய தொகுப்பு, குழு நிழற்படம் மற்றும் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்கள் அறிவுடைநம்பி, கவுரி, சுடர்விழி ஆகியோர் மாணவர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினர்.
மேலும் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் படத்தையும், ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கி சிறப்பு செய்தனர். இறுதியாக எட்டாம் வகுப்பு மாணவர் செபாஸ்டின் நன்றி கூறினார்.