டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* எட்டாம் வகுப்பு பாடங்களில் இருந்து முகலா யர்கள், மற்றும் துக்ளக், லோடி உள்ளிட்ட டில்லியை தலைமையகமாக கொண்டு ஆண்ட முஸ்லிம் அரசர்கள் பற்றிய பாடங்கள் நீக்கம்; கும்பமேளா, மேக் இன் இந்தியா குறித்த பாடங்களை சேர்த்துள்ளது, என்.சி.இ.ஆர்.டி.
தி இந்து:
* பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டுமாறு அரசாங்கத்திடம் கூட்டு முறையீடு செய்ய வேண்டுமா என்பது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜக அரசு அரசியலமைப்பு உரிமைகளை சிதைத்து வருகிறது; இடஒதுக்கீட்டுக் கொள்கை களை சீர்குலைக்கிறது என அகிலேஷ் குற்றச் சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜாதி, மதம் குறித்து இந்திய யதார்த்தங்களை அங்கீகரிப்பதில் சிபிஎம் தவறு இழைத்து விட்டது என சிபிஎம். அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி ஒப்புதல்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* புல்டோசரை பயன்படுத்துவதற்குப் பதிலாக, பாஜக சுத்தியல் மற்றும் உளியைப் பயன்படுத்தி அரசமைப்பை சிறிது சிறிதாக அழித்து வருகிறது என ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.
* தமிழ்நாட்டை தனது வேட்டைக் களமாக மாற்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா முயற்சி; இது ஒரு திராவிட பூமி என்பதை நிரூபிப்பதன் மூலம் மாநில மக்கள் அமித் ஷாவின் திட்டத்தை தோற்கடிப்பார்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடல்.
* நிதி முறைகேடு வழக்கு: சேலம் காவல்துறையினர் பெரியார் பல்கலைக்கழக துணைத் தலைவர் ஆர். ஜெகநாதனிடம் ஆறு மணி நேரம் சரமாரிக் கேள்வி.
– குடந்தை கருணா