திருப்பராய்த்துறை சிறீராமகிருஷ்ண குடிலில் ஆதரவற்ற சிறார்களுக்கு இலவசக் கல்வி வழங்குதல்: அரிய வாய்ப்பு

2 Min Read

திருப்பராய்த்துறை, ஏப்.27- திருப்பராய்த்துறையில் உள்ள சிறீராமகிருஷ்ண குடில் 1949ஆம் ஆண்டு துவங்கி கடந்த 75 ஆண்டுகளுக்கு மேல் ஆதரவற்ற சிறார்களின் கல்வி மேம்பாட்டிற்காக அரிய சேவை செய்து வருகிறது.

இங்கு தாயோ, தந்தையோ அல்லது யாராவது ஒருவர் இல்லாத குழந்தைகள் சேர்த்துக் கொள்ளபடுகிறார்கள். இந்த ஆஸ்ரமத்தில் ஓர் துவக்கப்பள்ளியும். உயர்நிலைப்பள்ளியும் உள்ளன. ஆசிரியர்கள் தங்க குடியிருப்புகள் உள்ளன. இதனால் இரவும் பகலும் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டில் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் அரசு

அய்.டி.அய்.ல் சேர்த்து தொழிற்பயிற்சி அளிக்கப் படுகிறது. வேலை இவர்களின் வாய்ப்பிற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இங்கு சேர்க்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் உணவு, உடை, மருத்துவம் மற்றும் இருப்பிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இங்கு கல்வி பயிலும் சிறார்களுக்கு காந்திய வழி கல்வி மூலம் அவரவர் பணிகளை அவர்களே செய்து கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் 10ஆம் வகுப்பில் 400 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை சென்னை மயிலாப்பூர் சிறீ ராமகிருஷ்ண மிஷன் கல்லூரியில் பாலிடெக்னிக் படிப்பில் சேர்த்து பொறியாளர்களாகவும் ஆக்கப்படுகின்றனர். இங்குள்ள மாணவர்களை வாரம் ஒருமுறை ஜி.வி.என். டாக்டர் பார்வையிடுகிறார். தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரை அளித்து அவர்கள் உடல் நலன் காக்கப்படுகிறது. மாணவர்கள் ஓவியம். நாடகம், யோகா, கணினி பயிற்சி ஆகிய கலைகளில் திறமை வெளிப்பட வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

“திக்கற்ற மாணவர்களை 1ஆம் வகுப்பு முதல் 6-ஆம் வகுப்பு வரை சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.” குழந்தையாக சேரும் மாணவர்கள் திறன் மிக்க குடிமக்களாக வெளியேறுகின்றனர். இவை அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இங்கு சுமார் 200 மாணவர்களுக்கு மேல் கல்வி பயின்று வருகிறார்கள். ஆதலால் கல்வி தேவைப்படும் ஆதரவற்ற சிறார்களின் பாதுகாவலர்கள் கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

சிறீ ராமகிருஷ்ண குடில், திருப்பராய்த்துறை, திருச்சி மாவட்டம்-639115, தமிழ்நாடு.

தொலைபேசி எண்: 0431-2614235 அலைபேசி: 8300133766, 6383716578.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *