அரசு அனுமதியின்றி பவுண்டேசன் தொடங்கிய விவகாரத்தில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் இரண்டாவது நாளாக நேற்றும் (26.4.2025) விசாரணை நடத்தப்பட்டது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், அரசின் முன்அனுமதியின்றி பூட்டர் பவுண்டேசன் என்ற நிறுவனத்தை தொடங்கியதாக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், இணை பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர் மீது கருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதில் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். உடனடியாக அவருக்கு பிணை வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதையடுத்து பிணையையும் ரத்து செய்ய காவல்துறை தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக அவருக்கு அழைப்பாணை அனுப்பி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சூரமங்கலம் உதவி ஆணையர் ரமலி ராமலட்சுமி சம்மன் அனுப்பினார். நேற்று முன்தினம் (25.4.2025), துணைவேந்தர் ஜெகநாதன் காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானார். மாலை 5.15 மணி வரை 6.15 மணி நேரம், அவரிடம் விசாரணை நடந்தது. மீண்டும் 2ஆவது நாளாக நேற்று காலை 11 மணிக்கு துணைவேந்தர் ஜெகநாதன் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நடக்கும் விசாரணை வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. அவரிடம் மொத்தம் ஆயிரம் கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
7997 அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம்அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
சட்டபேரவையில், தி.மு.க. உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம்) பேசும்போது, தாம்பரம் தொகுதி முடிச்சூர் ஊராட்சி தெற்கு லட்சுமி நகரில் உள்ள குழந்தைகள் மய்யத்தை சீரமைக்க வேண்டும். தாம்பரம் தொகுதியில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும்” என்றார்..
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதாஜீவன், “சமூக நலத் துறை சார்பாக 7 ஆயிரத்து 997 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமனம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. துறை ரீதியாக நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப் படும்” என்றார்.
ரூ.7.5 கோடிக்குச் சொத்து
வைத்திருக்கும் பிச்சைக்காரர்
வைத்திருக்கும் பிச்சைக்காரர்
மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயினுக்கு ரூ.1.4 கோடி மதிப்பில் 2 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. அவரது நிகர மதிப்பு ரூ.7.5 கோடி. 2 கடைகளையும் அவர் வைத்துள்ளார். இவ்வளவு சொத்து சேர்த்தும் பிச்சை எடுப்பதை அவர் நிறுத்தவில்லை. மும்பை விமான நிலையம் முன்பு பிச்சையெடுக்கும் அவர், நாளொன்றுக்கு ரூ.2,000 – ரூ.2,500 என்ற வகையில் மாதம் ரூ.60,000 – ரூ.75,000 வரை வருமானம் ஈட்டுகிறார்.
இந்தியா vs பாக்:
இந்த பொருட்களின் விலை உயரலாம்!
இந்த பொருட்களின் விலை உயரலாம்!
பாக். உடனான வர்த்தகம் முற்றிலும் முடிவுக்கு வந்தால், அங்கிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருள்களின் விலை அதிகரிக்கலாம். உலர் பழங்கள், கல் உப்பு, ஆப்டிகல் லென்ஸ் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரலாம். அதேபோல், சுண்ணாம்பு, காட்டன், ஸ்டீல், ரசாயனங்கள், லெதர் விலையிலும் மாற்றம் இருக்கும். இருப்பினும், பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானுக்குத்தான் இது அதிக இழப்பை ஏற்படுத்தும்.
பிறந்த குழந்தைக்கும்
உடற்பயிற்சி தேவை
உடற்பயிற்சி தேவை
பிறந்த குழந்தைக்கும் உடற்பயிற்சி தேவை -பிறந்தது முதல் சுறுசுறுப்பாக கைகால்களை உதைத்து, தவழ்ந்து கொண்டு இருக்கும் குழந்தைகள் வளரும்போது இயல்பான எடையுடன் இருக்கின்றன; ஆனால் கொஞ்சம் சோம்பலான குழந்தைகள் வளரும் போது உடல்பருமன் அதிகரிக்கிறது என்கிறார்கள் அமெரிக்க ஆய்வாளர்கள். பெற்றோர்களே கவனம், குழந்தைக்கும் உடற்பயிற்சி தேவை!
நண்பகலில் வெளியே
வருவதை தவிர்க்கவும்
வருவதை தவிர்க்கவும்
கோடை வெயில் வாட்டி வதைப்பதால், மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். நாளை இயல்பை விட வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசவுகரியம் ஏற்படலாம். எனவே, பிற்பகல் 11 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும். அதிகளவில் நீர், மோர், இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும்
நூறு வயதுக்கு மேற்பட்ட
73 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது
அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
சட்டப்பேரவையில் நிதித்துறை மானியக்கோரிக்கை யின் போது அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதம் இருக்கும்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சி 9.69 சதவீதம் வளர்ச்சி அடைந்து முதன்மை மாநிலமாக இருக்கிறது. குறிப்பாக சேவைத்துறையில் தமிழ்நாடு 12.7 சதவீத வளர்ச்சி அடைந்து இருக்கிறோம். சென்னை பரந்தூர், ராமநாதபுரம், ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுகிறது. கோவை, மதுரையில் மெட்ரோ யில் சேவை வர உள்ளது.
தமிழ்நாட்டில் ஓய்வூதியம் பெறுபவர்களின் எண் ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 951 பேர் இருக்கிறார்கள். ரூ.46 ஆயிரம்கோடி செலவு செய்கிறோம். 100 வயதுக்கு மேல் 73 பேர் ஓய்வூதியம் பெறுகிறார்கள். நாகை மாவட்டத்தை சேர்ந்த 108 வயது கோபாலகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி திருக்கோவிலூரை சேர்ந்த 107 வயது ஆரோக்கியமேரி, நெல்லை அம்பாசமுத்திரத்தை சேர்ந்த 107 வயது பாலம்மாள் ஆகியோர் அதிக வயது உடையவர்கள் அவர்கள் நேற்று நோயற்ற வாழ்வு வாழவேண்டும். ராமானுஜர், 120 ஆண்டுகள் வாழ்ந்தார். அவரை போல இங்கிருப்பவர்களும் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.