தமிழ்நாட்டில் சிகரெட் லைட்டருக்கு தடை வருகிறது

viduthalai
1 Min Read

சென்னை, ஏப்.27- தமிழ்நாடு சட்டப் பேரவையில் கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூர்ராஜூ (அ.தி.மு.க.) பேசும்போது, ‘தென் மாவட்டங்களிலே ஏழைத்தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு தரும் பிரதான தொழிலாக தீப்பெட்டித் தொழில் இருந்து வருகிறது. அந்தத் தொழிலுக்கு, தற்சமயம் ஒரு சவாலாக ‘பிளாஸ்டிக் லைட்டர்’ வந்துள்ளது. ஒன்றிய அரசை எதிர் பார்க்காமல், அந்தமான் நிக்கோ பார்தீவிலே உள்ள யூனியன் பிரதேசம் சுற்றுச் சூழல் துறை மூலமாக சிகரெட் லைட்டருக்கு தடை விதித்துள்ளது. அந்த முறையை இந்த அரசு முயற்சித்து, நமது மாநில சுற்றுச் சூழல் துறையின் மூலமாக ‘லைட்டரை’ தடை செய்யலாம். இதன் மூலம் தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்படும்’ என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கம் தென் னரசு பேசியதாவது:-

ஒருமுறை மட்டும் பயன்படுத்தி வீசக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏற்ெகனவே தடை விதிக்கப்பட்டு உள் ளது. தென் மாவட்டங்க ளிலே குறிப்பாக கோவில் பட்டி, சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் தீப்பெட்டித் தொழிலிலே ஈடுபடும் மக் களுக்கு லைட்டர் என்பது ஒரு மிகப் பெரிய வாழ்வாதாரப் பிரச்சி னையாக உருவாகியிருக்கிறது.

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசக்கூடிய ‘சிகரெட் லைட்டரை’, அது கேஸ் நிரப்பப்பட்டு இருந்தாலும் சரி, நிரப்பப்படாமல் இருந் தாலும் சரி அதன் விலை ரூ.20-க்கு கீழே உள்ளது. அவைதான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எனவே, இதை முற்றிலுமாக தடை செய்வதற்கு தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தன்னுடைய பரிந் துரையை அளித்து உள்ளது. அரசின் பரிசீலனையில் அது இருக்கிறது. விரைவில் முதலமைச்சரின் ஒப்புதல் பெற்று, அதற்கான உரிய நடவடிக்கைகளை அரசு நிச்சயமாக மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *