மின்சார வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் ரத்து

1 Min Read

சென்னை, ஜூலை 1- பேட்டரி, மெத்தனால் மற்றும் எத்தனாலில் இயங்கும் வாகனங்களை, போக்குவரத்து வாகனங்களாக இயக்க, அனுமதி கட்டணம் செலுத்து வதில் இருந்து, தமிழ்நாடு அரசு விலக்கு அளித்துள்ளது.

பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனம்; மெத்தனால், எத்தனால் ஆகியவற்றை எரிபொருளாகக் கொண்டு இயக்கப்படும் வாகனங்கள் போன்றவற்றை, அனுமதி கட்டணம் செலுத்தாமல் இயக்க அனுமதிக்க கோரி, போக்குவரத்து ஆணையர் அரசுக்கு கடிதம் எழுதினார்.

அதை பரிசீலனை செய்த அரசு, பேட்டரி, மெத்தனால் மற்றும் எத்தனாலில் இயங்கும் வாகனங்களில், சரக்கு வாகனங்கள் தவிர்த்து மற்ற வாகனங்களை, போக்கு வரத்து வாகனங்களாக இயக்கும்போது, அனுமதிக் கட்டணம் செலுத்தாமல் இயக்க, அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது. இதற்கான அரசாணையை, உள்துறை செயலர் அமுதா வெளியிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *