புதுடில்லி, ஜூலை 2 ஒடிசா ரயில் விபத்துக்கு பிறகு மத்தியப் பிரதே சத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான சந் திரசேகர் கவுர் என்பவர் ரயில் வேயில் தற்போதைய நிலையில் உள்ள காலிப் பணியிடம் குறித்து ஆர்டிஅய் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ரயில்வே அமைச்சகம் கொடுத்துள்ள பதிலில் ‘கடந்த ஜூன் 1-ஆம் தேதி நிலவரப்படி, ரயில்வேயில் 2,74,580 குரூப் – ‘சி’ பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 1,77,924 பணியிடங்கள் பாது காப்புப் பிரிவில் காலியாக உள்ளன’ என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த ஆண்டு அக்டோபருக் குள் 1.52 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. அவற்றில் 1.38 லட்சம் பணியிடங்களுக்கான நியமன கடிதங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. அதில் 90,000 பேர் பணியில் சேர்ந்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளனர்.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை எங்கே? ரயில்வேயில் 2.74 லட்சம் பணியிடம் காலி
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books