சென்னை, ஏப். 25- காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப் பேற்று ஒன்றிய உள் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தி யாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், காஷ்மீ ரில் நிகழ்த்தப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. பயங்கரவாதத்தை கடுமை யாக நசுக்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசின் தவறான கொள்கை மற்றும் ஜம்மு-காஷ்மிரில் பாஜக எடுத்த நடவடிக்கை இந்த விளைவுகளை உருவாக்கி உள்ளது. நாட்டின் உளவுத்துறை தோல்வி அடைந்திருப்பதைத்தான் இந்த சம்பவம் காட்டுகிறது.
அரசியல் சட்டப் பிரிவு 370 அய் அகற்றிவிட்டால் அங்கு பயங்கரவாதம் இருக்காது என்று பாஜக தொடர்ந்து கூறி வந்தது. பிறகு அரசியல் சட்டப்பிரிவு 370 அய் அகற்றிவிட்டு சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாக வந்து செல்லலாம் எனத் தெரிவித்தார்கள். அதை நம்பி அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷா இதற்கு பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார் தொல். திருமாவளவன்