தொடர் வாசகர் வட்டக் கூட்டம் நடத்த நிதி

viduthalai
0 Min Read

கிருட்டினகிரி பெரியார் மய்யத்தில் மாதந்தோறும் வாசகர் வட்டக் கூட்டம் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மாவட்டக் கழக பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுடன் பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன் விடுதலை வாசகர் வட்டத்துடன் – பகுத்தறிவாளர் கழகம் இணைந்து தொடர் மாதாந்திர வாசகர் வட்ட கூட்டம் நடத்த நன்கொடை ரூ1000த்தை முதலாவதாக கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினார். மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாவட்ட ப.க.துணைச்செயலாளர் மா.சிவசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *