விடுதலை வாசகர் பணி ஓய்வு-பாராட்டு

1 Min Read

அரசியல்

தருமபுரி  பெரியார் படிப்பகத்திற்கு தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக வருகை தரும் விடுதலை வாசகர் பட்டதாரி ஆசிரியர் எம்.ம.சேவியர் செல்வநாதன் தருமபுரி  அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 30 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பெரியார் படிப்பக  பொறுப்பாளர் அ. தமிழ்ச்செல்வன், திராவிடர் கழக மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்விசெல்வி, மாநில மாணவர் கழக துணை செயலாளர் மா.செல்லதுரை, அரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் த. மு.யாழ் திலீபன்,  படிப்பக  உதவியாளர் அருணா, மாரவாடி கிளைக் கழக தலை வர் காந்தி, வாசகர் அசோக்குமார் இணைந்து பயனடை அணிவித்து தந்தை பெரியார் நூல்களை வழங்கி வாழ்த்தி பாராட்டினர். ஆசிரியர் சேவியர் செல்வநாதன் அனைவருக் கும் இனிப்பு  வழங்கி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *