Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: பிற இதழிலிருந்து…அரசமைப்புச் சட்டப் படி அலங்காரப் பதவியில் இருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் உச்சநீதிமன்றம் பற்றி கருத்து சொல்வதற்கு முன்பு சிந்திக்க வேண்டாமா?
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
பிற இதழிலிருந்து...

பிற இதழிலிருந்து…அரசமைப்புச் சட்டப் படி அலங்காரப் பதவியில் இருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் உச்சநீதிமன்றம் பற்றி கருத்து சொல்வதற்கு முன்பு சிந்திக்க வேண்டாமா?

Last updated: April 24, 2025 3:05 pm
Published April 24, 2025
பிற இதழிலிருந்து...
SHARE

‘டைம்ஸ் ஆப் இந்தியா’ தலையங்கம் கேள்வி!

அரசியலமைப்புப் பதவிக்கான எல்லைகளையும் கண்ணியத்தையும் மீறி குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கருத்து வெளியிடுவது இது முதல்முறையல்ல. ஆனால் கடந்த வாரம் வியாழன் அன்று அவர் தெரிவித்த கருத்து கவலைப்படத்தக்கது என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வின் ஏப்ரல் 18ஆம் நாளின் தலையங்கம் தெரிவித்துள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- இந்தப் பிரச்சினை, உச்ச நீதிமன்றத்தின் ஆளுநர்கள் தொடர்பான தீர்ப்பின் காரணமாக குடியரசுத் துணைத் தலைவரின் கோபமாக வெளிப்பட்டுள்ளது. தனது உரையில் அவர் உச்ச நீதிமன்றத்தைச் “சூப்பர் நாடாளுமன்றம்” என்று விமர்சித்தார். இன்னும் மோசமானது என்னவென்றால், “நாட்டின் சட்டம் அவர்களுக்குப் பொருந்தாது என்றும், நீதிபதிகளுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை” என்றும் அவர் விமர்சித்தது தான்..

“நீதிபதிகளுக்குத் தங்களுடைய பதவியின் மாண்பில் அக்கறையில்லை. குடியரசுத் தலைவரையும் ஆளுநர்களையும் ஒரே கோட்டில் வைத்துப் பார்க்க முடியாது என்று அவர் கூறினார். ஆனால் அரசமைப்பின் 142ஆவது சரத்து உச்ச நீதிமன்றத்திற்குச் சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது, இதை ஆளுநர் ரவி மற்றும் தமிழ்நாடு அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் பயன்படுத்தியது. இதனை “ஜனநாயகத்திற்கு எதிரான நீதித்துறை எடுத்த அணு ஆயுத ஏவுகணை” என்று அவர் குறிப்பிட்டபோது, அலங்காரமான அரசமைப்புப் பதவிகளுக்கான மாண்பிலிருந்து அவர்தான் விலகியிருக்கிறார். மாநிலங்களவையை நடத்துவது தவிர, அன்றாடச் செயல்பாடுகளில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை. கொள்கை முடிவுகள், அரசியல் மற்றும் நீதித்துறை தீர்ப்புகள் தொடர்பாக குடியரசுத் துணைத் தலைவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
அதாவது, குடியரசுதுணைத் தலைவர் என்ன கூறினாலும், அவரது பதவி காரணமாக அவரது கருத்துக்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றில்லை என்று டைம்ஸ் ஆப் இந்தியா, தன் வாசகர்களுக்குத் தன் கருத்தைத் தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் பதவியை வகிப்பவர்களுக்கும் இதேபோன்ற கட்டுப்பாடுகள் பொருந்தும்.
இதுவரை இருந்த குடியரசுத் தலைவர்கள், பெரும்பாலும் தங்கள் பணியில் சரியான அணுகுமுறையைக் கடைப்பிடித்துள்ளனர். ஆனால் அண்மைக் காலத்தில் பல ஆளுநர்கள் தங்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான அதிகார உறவுகளை மதிப்பிழக்க வைக்கும் அளவுக்கு வரம்புகளை மீறியுள்ளனர். ஜெக்தீப் தன்கர் ஆளுநராக இருந்த போது அவர் மாநில அரசின் அதிகார வரம்பை மதிப்பிழக்கச் செய்துள்ளார்.
தன்கர் கடந்த 17 அன்று ஆற்றிய உரையில் அரசமைப்பின் 145(3) சரத்தை திருத்துவதற்கும் வலியுறுத்தினார், இது அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்புகளின் (சரத்துகள்) மீதான கேள்விகளுக்கு சட்ட விளக்கம் அளிக்கும் வகையிலான வழக்குகளை விசாரிக்க உரிமை படைத்த உச்ச நீதிமன்ற அமர்வுகளின் அமைப்பைப் பற்றியது.

Also read

பிற இதழிலிருந்து...
நூறாண்டுகளுக்கு முன்பே ஜாதியை தூக்கியெறிந்தவர் தந்தை பெரியார் வி.பி.கலைராஜன்
அறிஞர் அண்ணாவை முதன் முதலில் சந்தித்ததைப் பற்றி கலைஞர்

நாட்டின் தலைமை நீதிமன்றம் அதன் முக்கிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வரையறுக்கும் அரசமைப்பு விதியை ஓர் அரசமைப்புப் பதவி வகிப்பவர் விமர்சிப்பது ஆபத்தானது. தற்போதுள்ள அரசியல் சூழலில் அரசமைப்பினை மீறி பல செயல்கள் நடந்துவருகிறது என்றும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் கட்டுரை தெரிவிக்கிறது.
அரசமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கு கிறார்கள் என்று பலர் அரசை விமர்சித்துக்கொண்டு இருக்கும் நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் நீதித்துறையின் செயல் பாட்டைக் கடுமையாக விமர்சிக்கும் கருத்தைக் கொண்டிருப்பது தவறான முண்ணுதாரனமாகும். எனவே, குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் உச்சநீதிமன்றம் குறித்து அவர் வெளியிட்ட கருத்து மிகவும் கவலைக்குரியதாகும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா கருத்துத் தெரிவித்துள்ளது.

Ad imageAd image

You Might Also Like

டாக்டர் கிச்சுலுவின் உபதேசம்

தமிழன்

கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு ‘‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ சிறப்புக் கட்டுரை!

துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு தேவையற்ற அவசரம்! “தி இந்து” ஆங்கில நாளேடு தலையங்கம்!

பிற இதழிலிருந்து… இறுதிக் காட்சி முடிந்தது; அரசியல் நாடகம் தொடர்கிறது!

TAGGED:டைம்ஸ் ஆப் இந்தியா
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?